ரேவா மாவட்டத்தின் மிகப் பெரிய திடல் ஏபிஸ் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கமாகும். வருடம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு கண்காட்சிகளும் இங்கே நடைபெறுகிறது. 24620 ஏக்கர் பரப்பளவில் இந்த அரங்கம் அமைந்திருக்கிறது. இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வண்ணம், மத்திய பிரதேச அரசு இதை அமைத்திருக்கிறது.
இந்த அரங்கம் மிகப் பெரியதாக இருப்பதால், அரசியல் கட்சிக் கூட்டங்களும் இங்கு நடைபெறுகிறது. நகராட்சி அதிகாரிகள், பல்வேறு கண்காட்சிகளை நடத்தி, அதன் மூலம் வருமானத்தை அதிகரித்திருக்கின்றனர்.