ரேவா மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஏரிகளில் கோவிந்த்கர் ஏரியும் ஒன்றாகும். கோவிந்த்கர் ஏரிக் கரையில் அமைந்திருக்கிறது அழகிய கோவிந்த்கர் அரண்மனை.
ஒரு அரண்மனை, அதனைச் சுற்றி அழகிய ஏரி, அமைதியான சூழ்நிலை என மனதிற்கு நிம்மதி தரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த இடம் கோவிந்த்கர் ஏரி.
ரேவா நகரில் இருந்து 13 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் வகையில், பல சிறு தீவுகளை இந்த ஏரியில் அமைத்திருக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் இருந்தும், பல்வேறு வகையான பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன. இந்தப் பறவைகளை கண்டு ரசிப்பதற்காகவே வரும் சுற்றுலாப் பயணிகள் பலர்.