மத்திய பிரதேசத்தில், ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தொன்மையான கிணறு ராணி தளாப் ஆகும். இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர், புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.
ஆகவே, சுற்றுலாப் பயணிகள் பலர், விசேஷ நாட்களில் ராணி தளாப்பிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். ராணி தளாப்பை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு இந்தக் கிணற்றின் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.
விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடித் தொழில் போன்றவற்றிற்கு இந்தப் புண்ணியக் கிணறு பெரிதும் பயன்படுகிறது. இந்தக் கிணற்றின் அருகே காளி கோவில் ஒன்று அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் இருக்கும் காளியை வழிபட்டால், தாங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோவிலில், தீபாவளி சமயத்தில் பிரம்மாண்ட பூஜைகள் நடைபெறும். தீபாவளிக்கு முதல் நாள் இங்கு காளி பூஜை நடைபெறுகிறது.