இந்தியாவிலேயே இந்த ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும் தான் இந்தியாவின் மூளை முடுக்குகளில் எல்லாம் பல மைல் தூரம் பயணம் செய்த சில ஸ்டீம் எஞ்சின்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
ரேவாரியில் உள்ள வராலற்று முக்கியத்துவம் நிறைந்த இந்த இடம் 1893-ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 125 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்டதாகும். மேலும் இது டெல்லியை பெஷாவாருடன் இணைக்கும் இரயில்வே அமைப்பாக இருந்துள்ளது. பெஷாவர் என்பது தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஒரு நகரமாகும்.
1990-ஆம் ஆண்டிலிருந்து ஸ்டீம் என்ஜின்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டதால் அவைகள் கவனிப்பாரின்றி இருந்தன. பின்னர் இரயில்வே துறை இதன் மீது உரிமை கோரி டிசம்பர் 2002-ல் இதனை ஹெரிடேஜ் அருங்காட்சியகமாக மாற்றியது.
இதனை இரயில்வே ஹெரிடேஜ் சுற்றுலாவாக மாற்ற எண்ணியதன் ஒரே காரணத்திற்காக இந்த இடம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் விக்டோரியன் காலத்தில் நம் நாட்டில் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட இரயில்வே சம்பந்த பொருட்களை வைக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
பின்பு அக்காலத்து சமிக்கை அமைப்புகள், இருக்கைகள் மற்றும் கிராமஃபோன்களும் போன்றவைகளும் கூட இங்கே சேர்க்கப்பட்டது. மேலும் அக்காலத்து என்ஜின்களின் செயல்விளக்கம் கூட இந்த அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பு நடத்தவும் விரும்புகின்றனர். 'காந்தி மை ஃபாதர்' என்ற படத்தின் ஒரு பகுதி கூட இங்கே படமாக்கப்பட்டது தான்.