12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரத் கோவில் மகா விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். புகழ்பெற்ற இந்து சந்நியாசியான ஆதிகுரு சங்கராச்சாரியாரால் கங்கைக் கரையில் உருவாக்கப்பட்ட இக்கோவில் இந்தப் பகுதிகளில் இருக்கும் பழமையான கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மகாவிஷ்ணுவின் சிலை ஷாலிக்ராம் எனப்படும் ஒரே கல்லில் செய்யப்பட்டது. நேபாளத்தில் இருக்கும் கண்டகி நதியில் அதிகமாக கிடைக்கும் இந்தக் கல், மகாவிஷ்ணுவைக் குறிப்பதாக இந்துக்கள் கருதுகிறார்கள்.
கோவிலின் உள்ளே ஒன்பது முக்கோணங்களின் சந்திப்பால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ எந்திரம் அமைந்துள்ளது. இந்த புனிதமான எந்திரம் ஆதிகுரு சங்கராச்சாரியாரால் இங்கு அமைக்கப்பட்டது.
1398ல் தமூர் லாங் எனும் இஸ்லாமிய மன்னனால் இக்கோவில் அழிக்கப்பட்டாலும், கிடைத்த இடிபாடுகளைக் கொண்டே இக்கோவில் மீண்டும் எழுப்பப்பட்டது.
சமீபத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் பல பழங்கால சிலைகள், காசுகள், பானைகள் மற்றும் கலைப்பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டது, பிரசித்தி பெற்ற இந்துப் பண்டிகையான பசந்த் பஞ்சமி இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.