ஹட்கோட்டியின் முதன்மையான சுற்றுலா தலங்களுள் ஒன்று ஹட்கேஸ்வரி கோவிலாகும். 6வது மற்றும் 9வது நூற்றாண்டுகளின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலில் இந்து கடவுளான துர்கா தேவியின் அவதாரமான மகிஷாசுரமர்த்தினியின் பித்தளையாலான சிலை வைக்கப் பட்டுள்ளது. எட்டு கைகளை உடைய இந்த கடவுள் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்குமாறு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஒரு கையில் உள்ள ஆணி போன்ற பொருள், அசுரனான மகிஷாசுரனின் இதயத்தை கிழித்துச் செல்வது போன்று இருக்கும்.
இந்து பண்டிகைகளான அஸ்வின் நவராத்திரி மற்றும் சைத்ரா நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் தொலைதூரங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கைகளில் பக்தர்கள் இங்கு வருவார்கள்.
இங்கிருக்கும் கடவுளுக்கு பூக்கள், அல்வா, வால்நட் மற்றும் அரிசி ஆகிய பொருட்களை ஆடு அல்லது செம்மறி ஆடுகளுடன பலியாக படைத்து, மக்கள் மரியாதை செய்வார்கள்.
இந்த வளாகத்தின் நுழைவாயிலில் இந்து மதத்தின் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கான கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவில் வளாகத்திற்குள் ஒரு தர்மசத்திரமும், தானிய களஞ்சியமும் உள்ளன.
உண்மையில் 'சிக்காரா' கட்டிடக்கலையையொட்டி மேலே வட்ட வடிவில் (Dome) அமைக்கப்பட்டிருந்த இந்த கோவில்கள் 19-ம் நூற்றாண்டுகளில் மரத்தாலான பகோடா வடிவங்களில் மாற்றியமைக்கப்பட்டு இன்றும் காட்சி தருகின்றன.