கடல் மட்டத்திலிருந்து 1100மீ உயரத்தில், கண்கவரும் இயற்கைக் காட்சிகளையுடைய கிராமமான ஹட்கோட்டி, சிம்லாவில் இருந்து பாப்பர் நதிக்கரையில், 105கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பிஷ்குல்டி மற்றும் ரான்வ்டி என்ற பெயர்களையுடைய இரு மலைநீரோடைகள் ஹட்கோட்டியில்தான் பாப்பர் நதியுடன் கலக்கின்றன. இந்த நதியின் நீரானது சாம்பல் நிறத்தில் இருப்பதால், புராணக்கதைகளில் இந்த நதி விஷத்தை வண்டலாக வெளியேற்றும் தன்மையையுடையது என்று சொல்லப்படுகிறது.
திரிவேணி சங்கமமாக, மூன்று நதிகள் ஒன்றாக கலக்கும் இடமாக விளங்கும் ஹட்கோட்டி இந்துக்களிடையே புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருப்பதில் வியப்பில்லை. இந்து மத நம்பிக்கைகளின் படி இந்த இடம் மத முக்கியத்துவம் வாயந்த இடமாகும்.
இந்து மதத்தில், அழிக்கும் கடவுளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானுக்கும், அவருடைய மனைவி பார்வதி தேவியாருக்குமிடையே இந்த இடத்தில் தான் போராட்டமொன்று நடந்தது.
பழைய காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் இங்கே அமைக்கப்பட்டுள்ள மரக்கதவுகள் மற்றும் கற்சுவர்கள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் அம்சங்களாகும்.
இந்த வகை கோவில்கள் ஹட்கோட்டியில் இருப்பதால் இந்த இடம் 'கற்கோவில்களின் பள்ளத்தாக்கு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.மலையேற்றம், மலைச்சுற்றுலா மற்றும் ராப்டிங் எனப்படும் படகு ஏற்றம் ஆகியவை ஹட்கோட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான அம்சங்களாகும்.