தில்யார் ஏரி டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 89 கி.மீ தூரத்தில் உள்ளது. ரோஹ்தக் நகரத்துக்கு அருகில் உள்ள ஏரி பிரம்மாண்டமான 132 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியை சுற்றிலும் பசுமையான இயற்கை பிரதேசம் காணப்படுவதால் டெல்லி மற்றும் சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளிலிருந்து மக்கள் அமைதியையும் இயற்கைச்சூழலையும் நாடி இங்கு வருகை தருகின்றனர்.
மிதவைப்படகு சவாரி, தூண்டில் மீன்பிடிப்பு, படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட விரும்புபவர்களும் இங்கு சிற்றுலாப்பயணமாக வருகை தருகின்றனர்.
ஒரு அற்புதமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக விளங்கும் இந்த ஏரிப்பகுதியில் ஒரு சிறிய விலங்குக்காட்சிசாலையும் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, மான், குரங்கு மற்றும் பறவை வகைகளை பார்த்து ரசிக்கலாம்.
குழந்தைகளுக்கான ஒரு குட்டி ரயில் சேவையும் இங்கு இயக்கப்படுகிறது. ஊஞ்சல்கள், பூங்கா அமைப்புகள் போன்றவையும் இந்த ஏரிக்கரையில் காணப்படுகின்றன.
பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்லாமல் விதவிதமான பறவைகள் காணப்படும் இடமாகவும் இந்த ஏரி விளங்குகிறது. மேலும் இந்த ஏரியில் பெயரிலேயே உள்ள ஒரு ரிசார்ட் விடுதியும் இதனை ஒட்டி அமைந்துள்ளது.
இதில் பார், ரெஸ்ட்டாரெண்ட் மற்றும் கடைகள் போன்றவை உள்ளன. இரவு நேரத்தை இப்பகுதியில் கழிக்க விரும்பும் பயணிகளுக்கான தங்கும் அறைகள் இந்த விடுதியில் கிடைக்கின்றன.