பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ரோஹ்தாஸின் பங்கு மகத்தானதாகும். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின் 1972ல் தனி மாவட்டம் ஆனது.
ரோஹ்தாஸ் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
முகலாயர்கள் காலத்து கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ள ரோஹ்தாஸ்கார்ஹ் கோட்டை, அழகிய கோவில் இருக்கும் தரசந்தி, ஷெர்ஷா சூரியின் கல்லறை இருக்கும் சாசரம், ஹஸன் ஷா சூரியால் கட்டப்பட்டுள்ள ஷெர்கார்ஹ் ஆகியவையும் இங்கு உள்ளன. வரலாற்று இடங்களின் பெருமை மட்டுமல்லாது இங்கு மதம் சார்ந்த இடங்களும் உள்ளன.
கோவில்களும், மசூதிகளும் ஒருங்கே உள்ள இங்கு சாச்சா ஷாஹிபீ கா குருத்வாரா என்ற சீக்கிய கோவிலும் உள்ளது. மேலும் அக்பர்பூர், ரெஹால், தியோ மார்கண்டே, பாலூனி அணை, அகோரிகோலா, த்ருவான் குண்டம் மற்றும் குப்தா அணை போன்ற ஏராளமான இடங்களும் உள்ளன.
விழாக்கள், கலைகள் மற்றும் ரோஹ்தாஸின் பிற சிறப்புகள்!
மக்களின் ஈடுபாடும், ஆனந்தமும் இங்கு நிகழ்த்தப்படும் கலைநிகழ்ச்சிகளை பார்ப்பதிலேயே இருக்கிறது. தசரா, ஹோலி, துர்காபூஜா, சித்ரகுப்த பூஜா, மிலாத் உல் நபி, தீஜ், பைதூஜ், தீபாவளி மற்றும் வட் சாவித்ரி பூஜா போன்ற பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இங்கு விழாக்களின் போது மதத்திற்கு அப்பாற்பட்டு மக்களின் சகோதரத்துவத்தை உணரலாம். 1982ல் 1342சதுர கிமீ பரப்பளவில் கட்டப்பட்டஇங்கிருக்கும் கைமூர் வனவிலங்கு சரணாலயம் புகழ்பெற்ற ஒன்றாகும்.
ரோஹ்தாஸ் வானிலை
அக்டோபர் முதல் மே வரை சுற்றுலா செல்ல ஏற்ற வகையில் இங்கு வட இந்திய சமவெளிகளில் நிலவும் வானிலையே நிலவுகிறது,
ரோஹ்தாஸ் நகரை எப்படி அடைவது?
ரோஹ்தாஸ் நகருக்கு ரயில் மற்றும் பேருந்து மூலம் சுலபமாக பயணிக்கலாம்.