பலந்தா கிராமத்திற்கு அருகே, ரூர்கேலாவில் இருந்து 22.3கிமீ தொலைவில் உள்ள இந்த அணை 1978 முதல் இயங்கத் தொடங்கியது. 660.20மீ நீளமும், 25.96மீ உயரமும் கொண்ட இந்த அணையைச் சுற்றி பல தளங்கள் உள்ளன.
நீர்பாசனத்துறையால் நிர்வகிக்கப்படும் கண்காணிப்பு பங்களாவைச் சுற்றி இயற்கை எழில் நிறைந்து கிடக்கிறது. அமைந்தியையும், ஓய்வையும் விரும்பும் பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் இது.