பிர்மித்ரபூரில் உள்ள ராணி சதி கோவில் ரூர்கேலாவில் இருந்து 35கிமீ தொலைவில் உள்ளது. 2ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தக் கோவில் 1967ல் கட்டப்பட்டது.
அழகுநிறைந்த இந்தக் கோவில் வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. உட்சுவர்களில் உள்ள அழகிய கலை வேலைப்பாடுகளும், உச்சியில் உள்ள தங்கப் பானையும் கோவிலுக்கு கம்பீரமான அழகைத் தருகின்றன.
தினசரி பூஜைகள் தவிர்த்து அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. காலை 5அணி முதல் 12வரையும், மாலை 4ல் இருந்து 9வரையும் கோவில் திறந்திருக்கிறது.