மா ஹரியாலி தேவி கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயில் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 37 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை சுற்றி இமயமலைத்தொடர்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன.
இந்த கோயிலின் தெய்வம் சீத்லா மாதா, பாலா தேவி மற்றும் வைஷ்ணோ தேவி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஷத்ரபால் மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள 58 சித்தர் பீடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. புராணக்கதைகளின்படி தேவகியின் ஏழாவது குழந்தையாக மஹாமாயா பிறந்தபோது அந்த குழந்தையை மதுரா அரசன் கம்சன் தரையில் வீசி கொன்றதாக சொல்லப்படுகிறது.
அந்த சதைப்பகுதிகள் பூமியின் பல்வேறு இடங்களில் விழுந்தபோது அவற்றில் கைப்பகுதி இந்த கோயில் ஸ்தலத்தில் விழுந்ததாகவும் ஐதீகம் கூறுகிறது.
ஜன்மாஷ்டமி மற்றும் தீபாவளி திருநாட்களில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். அச்சமயம் ஹரியாலி தேவியின் சிலை ஹரியாலி கந்தாவிலிருந்து 7 கி.மீ தூரத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.