மத்மஹேஷ்வர் கோயில் எனப்படும் இந்த கோயில் மத்மஹேஷ்வர் ஆறு உதயமாகும் இடத்திற்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3289 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஸ்தலம் இரண்டாவது கேதார் என்று அழைக்கப்படுகிறது.
புராணக்கதைகளின்படி, சிவபெருமான் பாண்டவர்களை சந்திக்காமல் பூமியில் ஒளிந்து கொண்டபோது அவரது உடற்பகுதி பின்னர் இந்த மத்மஹேஷ்வர் ஸ்தலத்தில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயில் குளிர்காலத்தில் 6 மாதங்களுக்கு மூடப்படுகிறது. அச்சமயம் இக்கோயிலின் வெள்ளி தெய்வச்சிலைகள் உக்கிநாத் எனும் ஸ்தலத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த இடத்திலிருந்து காளி கோயில், கேதார்நாத், சரஸ்வதி குண்ட் மற்றும் சௌகம்பா சிகரம், நீலகண்ட சிகரம் போன்றவற்றும் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.