இமாலய மலைத்தொடரின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள அனந்த்பூர் சாஹிப், “முக்தி அளிக்கக்கூடிய புண்ணிய நகரம்” என்றும் அறியப்படுகிறது. ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேக் பஹதூர் அவர்களால் நிறுவப்பட்டது இந்த நகரம்.
பிலாஸ்பூரின் டொவாகர் ராணி சம்பா, தன் கணவரான ராஜா தீப் சந்த் அவர்களின் ஈமக்கிரியைக்கு வருகை புரிந்த குருவுக்கு ஒரு துண்டு நிலத்தை வழங்கியதாக ஒரு பிரபல நம்பிக்கை இங்கு உலவுகிறது.
குரு தேக் பஹதூர் அவர்களால் மாகோவால் சிதைவுகளுக்கு அருகில் உருவாக்கப்பட்ட சக் நனாகி என்ற கிராமமே பிற்காலத்தில் அனந்த்பூர் சாஹிப் என்ற பெயரில் பிரபலமடைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ரூப்நகருக்கு ஈர்த்து வரும் வருடாந்தர திருவிழாவான ஹொல்லா மொஹல்லா இங்கு தான் கொண்டாடப்படுகிறது.
ரூப்நகரிலிருந்து சுமார் 41 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம் சீக்கியர்கள் புனிதமாகப் போற்றி வழிபடும் பிரபலமான சில குருத்வாராக்கள் மற்றும் கோட்டைகளைக் கொண்டுள்ளது.