தொல்பொருளியல் அருங்காட்சியகம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் ரூப்நகருக்கு அருகில் உள்ள முதல் ஹாரப்பா வரலாற்று ஸ்தலத்திலிருந்து அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட கலைப்பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் பொருட்டு, இந்திய தொல்பொருளியல் ஆய்வுத் துறையினால் 1998 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும்.
வீணை வாதினி (வீணை வாசிக்கும் பெண்), சந்திரகுப்தர் காலத்தைய நாணயங்கள் மற்றும் பல்வேறு இதர கலைப்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் ஆகியவற்றின் பாதுகாக்கப்பட்ட சில நினைவுச்சின்னங்களையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம்.