சஹரன்பூர் பகுதியில் அமைந்திருக்கும் அம்பேத்கர் பூங்கா, அண்ணல் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருக்கிறது. இந்திய சட்ட வல்லுநரான அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்.
இன்னும் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல வகையில் சிதறடிக்கப்படுகிறார்கள். அம்பேத்கரின் வாழ்க்கை இந்திய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது. அதுபோல் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையிலும் அவருடைய வாழ்க்கை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
அம்பேத்கர் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மாயாவதி அவர்கள் உத்திரப்பிரதேசத்தில் முதல்வராக இருந்த போது, அந்த மாநிலம் முழுவதும், அம்பேத்கார் நினைவாக பல நினைவு மண்டபங்களை எழுப்பினார்.
அவற்றில் ஒன்றாக அம்பேத்கார் பூங்காவும் விளங்குகிறது. இந்த பூங்கா உள்ளூர் மக்களையும் அதே நேரத்தில் வெளியூர் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் ஏராளமானோர் ஜாக்கிங் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவர்.அதுபோல் சிறுகுழந்தைகள் இந்த பூங்காவில் விளையாடி மகிழ்வர்.