சஹரன்பூர் பகுதியில் அமைந்திருக்கும் இன்னொமொரு முக்கிய சமயத் தலம் சிரி பாபா லால் தாஸ் ஆகும். இந்த பகுதிக்கு ஏராளமான இந்து மற்றும் இஸ்லாமிய சமய மக்கள் வந்து செல்கின்றனர்.
முகாலய மன்னர்கள் காலத்தில் சிரி பாபா லால் தாஸ் என்ற ஒரு முனிவர் இந்த பகுதியில் தியானம் செய்து வந்ததன் நினைவாக இந்த நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
அவருடைய தியானத்தின் வலிமையால் முகலாய மன்னரான தார சிக்கோ, இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டார். சிரி பாபா லால் தாஸ் முனிவர் தியானம் செய்த இடத்தில் அவர் செய்த தியானத்தின் நினைவாக ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டிருக்கிறது.