கோஹோஜ் கோட்டை சஜன் கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த கோட்டை போஜ் மன்னர்களால் கட்டப்பட்டது. இதன் வரலாற்று சிறப்புக்காகவும், கோட்டையை சுற்றியுள்ள எழில் மிகு காட்சிகளுக்காகவும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
கோஹோஜ் கோட்டையை குஜராத் மன்னரிடமிருந்து 16-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள், கோட்டையை மீண்டும் புதுப்பித்து கட்டியுள்ளனர். அதன் பிறகு இந்த கோட்டை 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வசம் செல்லும் வரை பேஷ்வர்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது.