இக்கோயில் அயோத்தியாபட்டினத்தில் அமைந்துள்ளது. ராமரின் பாதத்தடங்கள் இங்குள்ளதால் இக்கோயிலுக்கு இந்த பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மிகச் சிறந்த சிற்பக் கலைக்காக, இது மிகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள தூண்கள், தட்டினால் இசை எழுப்பக்கூடிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும்.
திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில், ராமரின் கதையை எடுத்துக்கூறும் வகையில் அமைக்கப்பெற்ற மிகப்பெரும் சிலைகள் பல உள்ளன. இக்கோயிலுக்கு வந்தால், அது அயோத்திக்குச் சென்று வந்ததற்கு ஈடாகும்.
ராவணனைத் தோற்கடித்தபின், ராமன், சீதை, லஷ்மணன், ஹனுமான் மற்றும் அவர்தம் படைவீரர்கள் தங்கிச் சென்ற இடத்திலேயே இக்கோயில் எழுப்பபட்டுள்ளது என்று சான்றோர் கூறுகின்றனர்.
அயோத்திக்கு சரியான நேரத்தில் செல்லமுடியாததால் ராமனின் முடிசூட்டுவிழா இவ்விடத்திலேயே நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இக்கோயிலில் வந்து வழிபட்டுச் சென்றால், அவர்தம் வாழ்வின் இன்னல்கள் அனைத்தும் மறைவதாக நம்பப்படுகிறது.