சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இங்கு, சிறிதும், பெரிதுமாக, பத்து தேவாலயங்கள் உள்ளன.
இவை, சின்னக்கொல்லப்பட்டி, ஏற்காடு ரோட்டில் அமைந்த சீர்திருத்த ஞானஸ்நானகன் தேவாலயம், அடைக்கல நகரில் உள்ள சிஎஃஸ்ஐ தேவாலயம், அழகாபுரத்திலுள்ள மைக்கேல் தேவாலயம், செவ்வாப்பேட்டையிலுள்ள சிஎஸ்ஐ லெக்லெர் தேவாலயம் மற்றும் புனித மேரி துணைத்தேவாலயம், மெய்யனூரில் உள்ள சேலம் புது வாழ்வு தேவாலயம் (என்எல்சி), நால்ரோட்டில் அமைந்த குழந்தை இயேசு தேவாலயம், கங்காவல்லி, அனையம்பட்டியிலுள்ள தேவாலயம், மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மாமாங்கம் என்ற இடத்தில் உள்ள கல்வரி திருச்சபை தேவாலயம், என்பனவாகும்.
இவற்றில் கடைசி மூன்று தேவாலயங்களுக்கு கட்டாயமாக சென்று வரலாம். கல்வரி திருச்சபை தேவாலயம், இப்பகுதியில் வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு தேவாலயம் ஆகும்.