மகாநதியின் ஆக்ரோஷத்தை அரவணைத்து உருவாக்கப்பட்ட நீர்மின் சக்தி திட்டமாக சிபிலிமா திட்டம் உள்ளது. சம்பல்பூரில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள சிபிலிமா நீர்;மின் சக்தி திட்டப்பகுதி, நகரத்தின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து விலகியிருக்க மிகவும் ஏற்ற இடமாகும்.
இந்த திட்டம் இயற்கையாக உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் சக்தியை ஆதாரமாக கொண்டுள்ளது. சுமார் 25 மீ உயரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் இந்த இடம் காண்பதற்கேற்ற சிறந்த சுற்றுலாப் பகுதியாகும்.
சிபிலிமா நீர்மின் சக்தி திட்டம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களை சிறப்பாக அனுபவிக்க விரும்பினால் இந்த பகுதிக்கு ஒரு நாள் சுற்றுலா வாருங்கள். ஆர்ப்பரித்து ஓடும் மகாநதியின் வேகத்திற்கு இந்த நீர்;வீழ்ச்சி ஒரு சிறிய சான்றாக இருக்கும்.
இந்த நீர்;வீழ்ச்சியின் அருகிலிருந்து காணும் காட்சி இப்பகுதியின் இயற்கை அழகிற்கு சான்றாக உள்ளது. சுற்று வட்டக் காட்சிகள் மற்றும் சில புகைப்படங்களுடன் சுற்றுலாப் பயணிகள் அருகிலிருக்கும் காந்தேஸ்வரி கோவிலுக்கும் செல்லலாம்.