காந்தேஸ்வரி கோவில் மத முக்கியவத்துவம் கொண்ட இடமாக மட்டுமல்லாமல், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடமாகவும் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தொங்க விடப்பட்டுள்ள எண்ணற்ற மணிகள் பெருமை பெற்றவையாக உள்ளன.
சற்றே தொட்டால் கூட சிணுங்கும் வகையில் உள்ள சிறு சிறு மணிகள் இந்த கோவிலின் வேலியைப் போல உள்ளன. இந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லும் படிகளும் கூட மணிகளால் சூழப்பட்டுள்ளன.
இதன் நுழைவாயில் கதவில் ஆயிரக்கணக்கான மணிகள் பக்தர்களால் தொங்க விடப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தின் உள்ளேயும் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன.
தங்களுடைய விருப்பங்கள் மற்றும் வேண்டுதல்கள் நிறைவேறப் பெற்ற பக்தர்கள் இந்த கோவிலில் காணிக்கையாக மணிகளை தொங்க விடுவார்கள்.
பருவநிலை மிகவும் மோசமாக இருந்து கரை எங்கிருக்கிறது என்று தெரியாத நாட்களில், இந்த கோவிலின் மணிச் சத்தம் படகுகளை கரையை நோக்கி கச்சிதமாக செலுத்த உதவும் வழிகாட்டியாக இருந்துள்ளது. மேலும், இந்த கோவில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டு வருகிறது.