இடைக்கற்காலத்தைச் (கி.மு.4000 முதல் 3000 வரை) பாறைப் திட்டுக்ள அல்லது குகைகளை கொண்டிருக்கும் இடமாக விக்ரம்கோல் உள்ளது. இந்த குகைகளின் சுவற்றில் சில குறிப்புகள் அல்லது ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சம்பல்பூரில் இருந்து 81 கிமீ தொலைவில் இருக்கும் இந்த குகைகளின், அதிகம் புகழ் பெற்றிராத கல்வெட்டுகள் வரலாற்று ஆராய்ச்சியாளர் மு.P.ஜெய்ஸ்வாலின் முயற்சிகளால் வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டன.
1933-ம் ஆண்டு வாக்கில் ஒரு துறவியின் மூலம் வழிநடத்தி செல்லப்பட்டு இந்த குகைகளை கண்டறிந்த இவர், இவற்றின் கண்டுபிடிப்புகளை 1935-ம் ஆண்டின் தொல்பொருள் நூலில் () வெளியிட்டார். ஆனால், இந்த கல்வெட்டுகளில் இருந்த விபரங்களுக்கு இன்னமும் அர்த்தம் தெரியவில்லை.
இந்த பாறைத்திட்டுகள் சுமார் 37 மீ நீளமும் மற்றும் 8 மீ உயரமும் கொண்டிருந்தன. இந்த குகைகள் வனப்பகுதிக்குள் உள்ளன. முறையான சாலைகளோ, தகவல் தொடர்பு வசதிகளோ இந்த இடத்தை பாதுகாக்கும் பொருட்டாக இதுவரையில் போடப்படவில்லை. மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்பதற்கான பயணச்சீட்டு இந்த விக்ரம்கோல் குகைகள் தான்!