சஞ்சியில் அமைந்திருக்கும் அசோகத் தூண் மத்தியப்பிரதேச மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த தூணின் உச்சியில் 4 சிங்கங்களின் சிலைகள் காணப்படுகின்றன.
இந்த நான்கு சிங்கங்களும் முகமுகமாகப் பார்க்காமல், பின்புறமாக அமைந்திருக்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தூண் கிமு 3-வது நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும்.
இப்போதுகூட இந்த முழுத் தூணையும் ஒரே பார்வையில் முழுமையாகப் பார்க்க முடியாது. இந்த தூண் கிரேக்க புத்த கட்டிடக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
சாரணாத்தில் அமைந்திருக்கும் தூணுக்கும் இந்த அசோகத் தூணுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் சாரணாத் தூணில் உள்ள தர்மசக்கரம் இந்த அசோகத் தூணில் இல்லை.