த கிரேட் பவல் என்று அழைக்கப்படும் ஒரு மிகப் பெரிய கிண்ணம் சஞ்சியில் அமைந்துள்ளது. இந்த கிண்ணம் மத்தியப்பிரதேசத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகக் கருதப்படுகிறது. புத்த சமய ஏடுகளில் இந்த பெரிய கிண்ணம் இடம் பெறுவதால், புத்த சமய மறுமலர்ச்சியின் தொட்டிலாக இந்த கிண்ணம் பார்க்கப்படுகிறது.
சஞ்சியில் ஒரு மிகப் பெரிய பகுதி ஒன்று உள்ளது. இந்த பகுதி முழுவதும் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நினைவிடங்கள் பண்டைய மக்களின் ஆன்மீகப் பிரதிபலிப்புகளாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நினைவிடங்களில் மிக முக்கிய ஒன்றாக பெரிய கிண்ணம் கருதப்படுகிறது.
இந்த கிண்ணத்தில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதுபோல் ஒரு காலத்தில் இந்த கிண்ணத்தில் உணவு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டன.
இந்த கிண்ணத்திலிருந்து புத்த துறவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டன. இந்த கிண்ணம் ஒரு மிகப் பெரிய பாறைக் கல்லால் செய்யப்பட்டது. தற்போது இந்த கிண்ணம் புத்த சமயப் பண்பாட்டை எடுத்து இயம்பும் ஒரு முக்கிய தளமாக விளங்கி வருகிறது.