சாங்க்லாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், பாஸ்பா நதியின் கரை அருகே இருக்கிறது சிட்குல் என்னும் புகழ்பெற்ற கிராமம். இந்திய-திபெத்திய எல்லையில் மக்கள் வசிக்கும் கடைசி கிராமமாக இது அறியப்படுகிறது.
மாதா தேவி என்று இந்த கிராமவாசிகளால் அழைக்கப்படும் தேவி சிட்குல் மாதியின் கோவில் இவ்விடத்தின் முக்கியமான ஈர்ப்பாக இருக்கிறது. கங்கோதரி என்னும் இந்து தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இடையே மிகவும் புகழ்பெற்றது.
சிட்குல் கிராமம் உருளைக்கிழங்கு விவசாயத்துக்காக உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். இவ்விடத்தில் பயிர் செய்யப்படும் உருளைக்கிழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுவதோடு, இதன் விளையும் சற்று அதிகமாக உள்ளது.
குளிர்காலத்தில், இந்த இடம் அதிகமான மழைப்பொழிவைப் பெறுகின்றது.இதன் காரணமாக இங்கு வாழ்கின்ற மக்கள் கீழ் இமாச்சலத்திற்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள்.