சங்க்ரூர் நகரத்துக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் மலெர்கோட்லா-சங்க்ரூர் சாலையில் அகோய் கிராமத்தில் அமைந்துள்ளது குருத்வாரா அகோய் சாஹிப்.
முதல் சீக்கிய குருவான ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி, ஆறாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு ஹர்கோபிந்த் சாஹிப் ஜி மற்றும் ஒன்பதாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு தெக் பகதூர் ஜி இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இங்கு வந்திருந்த போது ஸ்ரீ குரு ஹர்கோபிந்த் சாஹிப் ஜி தன் குதிரையை கட்டிய கரிர் மரம் இன்னமும் இங்கே உள்ளது. இந்த குருத்வாராவை இங்கே கட்டிக் கொண்டிருக்கும் போது இந்த மரம் தற்செயலாக விழுந்து விட்டதாம்.
பின்னர் காலப்போக்கில் அது தானாக வளர்ந்து விட்டது. இந்த குருத்வாராவின் மையப் பகுதியில் ஒரு பெரிய குவிமாடம் ஒன்று உள்ளது. இதனை சுற்றி பல சிறிய குவிமாடங்கள் உள்ளன. அனைத்து குருத்வாராக்களும் கிட்டத்தட்ட இதே கட்டடக்கலையை தான் கொண்டுள்ளன.