சங்க்ரூர் நகரத்தின் கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள மங்க்வல் கிராமத்தில் அமைந்துள்ள குருத்வாரா நானாகியானா சாஹிப், ஜிந்த் மாநிலத்தை சேர்ந்த ராஜா ரக்பீர் சிங்கால் 1886-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கிராமத்தின் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகளை வழங்குவதற்காக இங்கே வந்த ஸ்ரீ குரு நானக் ஜி மற்றும் ஸ்ரீ குரு ஹர்கோபிந்த் ஜி அவர்களின் நினைவாக இந்த குருத்வாரா கட்டப்பட்டது.
இங்குள்ள குளத்தில் தான் குருஜி தினமும் நீராடி விட்டு உள்ளூர் பூசாரிகளுக்கும் மக்களுக்கும் ஆன்மீக போதனைகளை வழங்குவார். சுற்றி வரம்பு உள்ள இந்த குளம் தற்போது புனித நீராடும் புனித குளமாக கருதப்படுகிறது.
இந்த குருத்வாராவில் திவான் ஹால் என்ற இடமும் பழமை வாய்ந்த கரிர் மரமும் உள்ளது. 1724 பாரசீக எண்கள் செதுக்கப்பட்டுள்ள குர்சிடபார் என்ற ஆயுதம் ஒன்று இங்குள்ளது.