அமைதியையும் நிசப்தத்தையும் விரும்பும் எவரும் இவ்விடத்தை ரசிப்பார்கள். இதுவும் ஒரு பரந்து விரிந்த மலை வாழிடம் ஆகும். காலையிலும் மாலையிலும் காலாற நடை பயிலவும், இளைப்பாறவும் ஏற்ற இடம் இந்த மலையுச்சியாகும்.
இம்மலையுச்சியிலிருந்து இதனைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கின் இயற்கை எழிலைக் கண்டு இன்புறலாம். குஜராத்திற்கும் மஹாராஷ்டிராவுக்குமான எல்லையைப் பிரித்துக்காட்டும் வேலியொன்றும் இம்மலையுச்சியில் அமைந்துள்ளது.