கடல் மட்டத்திலிருந்து 5155 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ், இந்துக்களின் அழிவுக்கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற புனிதத்தலமாகும்.
புராணப்படி இங்கு சிவன் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரும் காவியமான மகாபாரதத்தின் படி பாண்டவர்கள் இங்கு வந்து சென்றதாக அறியமுடிகிறது. இவ்விடம் பார்வையாளர்களுக்கு, பெரும் மலையேறும் பாதையைத் தருகிறது.
இங்குள்ள சிவனின் சின்னமான சிவலிங்கத்தில் ஒரு அதிசயம் உள்ளதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். வருடம் முழுவதும் இங்கு பனி பொழிந்தால் கூட, சிவலிங்கத்தின் மீது விழும் பனியானது உடனே உருகி விடுவதாக கூறுகின்றனர்.
ஸ்ரீகண்ட் மகாதேவ், கிரேட் இமயமலை தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது. அதனால் அழகான காட்சிகளையும், வளம் மிகுந்த பசுந்தாவரங்களின் அழகையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.