மணாலி-லே நெடுஞ்சாலையையொட்டியுள்ள சாரப் சு ஆறு, அங்கிருக்கும் ருப்சு பீடபூமியிலிருந்து உருகி ஓடி, சர்ச்சுவில் பார்வையாளர்களைக் கவரும் முக்கியமான சுற்றுலாதலமாக உள்ளது.
இந்த சாரப் ஆறு, தோடா ஆற்றுடன் படூம் பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்று, அசுரத்தனமான ஸன்ஸ்கார் ஆற்றினை தோற்றுவிக்கிறது. எனவே இந்த இடம் லடாக்கிலுள்ள ஸன்ஸ்கார் பகுதியை பார்க்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற அமைவிடமாக உள்ளது.
ஜுன் முதல் அக்டோபர் மாதங்களில் சராசரி வெப்பநிலை 25°C –க்குள் இருக்கும் நாட்களில் இவ்விடத்திற்கு வருகை தருவது நல்ல சுற்றுலா அனுபவத்தைக் கொடுக்கும்.
அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான குளிர்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை -38°C வரை சென்று விடுவதால் இக்காலகட்டம் சுற்றுலாவிற்கு ஒவ்வாத காலமாகும். அது மட்டுமல்லாமல், இந்நாட்களில் மிகவும் அதிகமான பனிப்பொழிவினை பெறுவதால், இங்குள்ள நெடுஞ்சாலையும் மூடப்பட்டு விடும்.