இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த முகாம் தளம், அதனைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் காட்சிகள் மனதிற்கு இதம் அளிக்கின்றன. இந்த முகாமைச் சுற்றியுள்ள அழகிய தேக்கு மரங்கள், மற்றும் அற்புதமான நினை நீர்வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த இதமான குளிரான காலநிலை இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள பெரிதும் ஈர்க்கிறது. இயற்கையை பாதுகாக்கும் முயற்சிகளை நீங்கள் இங்கு மட்டுமே காணமுடியும்.
இந்த முகாம் தளம் மிகப் பெரிய குழுவிற்கான முகாம் வசதிகளை வழங்குகிறது. இந்த தளத்திற்கு மிக அருகில் டாபோஹி கோட்டை, நர்மதா நதியில் அமைந்துள்ள ச்சன்தோட் மற்றும் கருடேஷ்வர் படித்துறைகள், ஜகாடியாவில் உள்ள சமணர் கோவில் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற சில முக்கியமான சுற்றுலா தலங்கள் உள்ளன.