நால்டேஷ்வர் சன்னதி சரிஸ்கா-அல்வர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்துள்ளது. இது மஹாதேவ் எனப்படும் சிவபெருமானுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
18ம் நூற்றாண்டைச்சேர்ந்த இக்கோயிலைச்சுற்றி அடர்ந்த வனப்பகுதி காணப்படுவதால் இது நிசப்தம் நிறைந்த எழிலுடன் காட்சியளிக்கிறது. எனவே பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் இடமாக இக்கோயில் தலம் மாறியுள்ளது.