அஜிங்க்யதாரா கோட்டை இந்த பெயரிலேயே அறியப்படும் மலையின்மீது கடல் மட்டத்திலிருந்து 1006மீ உயரத்தில் அமைந்துள்ளது. சாங்க்லி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சப்தரிஷி கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
ஷிலார் வம்சத்தை சேர்ந்த போஜ ராஜாவால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 1857ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் நினைவுத்தலமாகவும் இது அறியப்படுகிறது.
இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள யதேஷ்வர் மலையிலிருந்து இந்த கோட்டையை நன்றாக பார்க்க முடிகிறது. இந்த கோட்டையின் உச்சியிலிருந்து சதாரா நகரத்தின் முழு அழகையும் ரசிக்க முடிவது மற்றொரு விசேஷம்.