மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாங்க்லி மாவட்டத்தில் உள்ள இந்த அணை இம்மாநிலத்திலுள்ள பெரிய அணைகளில் ஒன்றாகும். இது கொய்னா ஆற்றின் குறுக்கே 1963ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
98.78 டி.எம்.சி நீர் கொள்ளளவைக் கொண்டுள்ள இந்த அணையில் 1920 மெகாவாட் மின்னுற்பத்தி சக்தி கொண்ட நீர்மின் நிலையமும் உள்ளது.
ஒரு மாலை நேரத்தை மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கழிப்பதற்கேற்ற அருமையான சிற்றுலாத்தலமாக இந்த அணைப்பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது. அருகிலுள்ள நேரு பூங்காத்தோட்டமும் காண வேண்டிய ஒரு அம்சமாகும்.