இந்த மயானி பறவைகள் சரணாலயம் இயற்கை ரசிகர்களை வெகுவாக கவரக்கூடிய ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும். இது சதாரா நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள பிரசித்தமான பறவைச்சரணாலயங்களில் ஒன்றான இது வருடந்தோறும் குளிர்காலத்தில் பலவகையான புலம்பெயர் பறவைகள் வாசம் செய்யும் இடமாக உள்ளது.பிராம்மணி வாத்துகள், கறுப்பு கொக்கு, அன்னப்பறவை மற்றும் வண்ணக்கொக்கு போன்ற அரிய பறவைகளை இங்கு காணலாம்.