ஒரு காலத்தில் மத்திய இந்தியாவின் நாகோட் மாநிலத்தில் அமைந்திருந்த பர்ஹூட் ஸ்துபா தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தின் சட்னா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கிமு 150ல் கட்டப்பட்ட இந்த ஸ்துபா பண்டைய இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் ஒப்பற்றச் சின்னமாக விளங்கி வருகிறது.
இந்த ஸ்துபா கட்டப்பட்ட போது நடந்த கதைகளை பர்ஹூட் ஸ்துபா விவரிக்கிறது. புத்த பெருமான் முக்தி அடைவதற்காக அவர் செய்த நெடிய பயணங்கள், யக்சாஸ், அன்றைய காலத்தின் நடைமுறை வாழ்கை மற்றும் பண்டைய கால சிறுசிறு நிகழ்வுகளைக்கூட இந்த ஸ்பா விளக்குகிறது.
பர்ஹூட் ஸ்துபாவின் சுவர் சிவப்பு கல்லால் கட்டப்பட்டுள்ளன. இந்த சிவப்புக் கல், ஸ்துபாவிற்கு மேலும் அழகைத் தருகிறது. தற்போது இந்த ஸ்துபா அழியும் தருவாயில் இருந்தாலும், இதில் இருந்த சில முக்கியமான பொருள்கள் அனைத்தும் கல்கத்தாவில் உள்ள அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.
எனினும் சட்னாவில் இருக்கும் பர்ஹூட் கலை அருங்காட்சியகம், ஸ்துபாவின் அருமை பெருமைகளை விளக்கிக் கூறுகிறது.