திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கு வரும் பயணிகள் இந்த மஞ்சின்பேலே அணையையும் பார்ப்பது அவசியம். இது அர்க்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தைப்போலவே இந்த மஞ்சின்பேலே அணையும் மகடி நகரத்துக்கு பாசன வசதிகளை தருவதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் பாசன வசதியை பெறும் பகுதி ‘தொரே சாலு’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஆற்றுப்பக்கம்’ என்பது இதன் பொருளாகும்.
நகரின் சந்தடியிலிருந்து விலகி ஓய்வாக நேரத்தை கழிக்க விரும்புபவர்களுக்கு இது உகந்த ஸ்தலமாகும். சிற்றுலா (பிக்னிக்) மற்றும் பறவை வேடிக்கைக்கும் இது பொருத்தமாக உள்ளது.
பெங்களூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள இந்த அணைக்கு வரவிரும்பும் பயணிகள் மகடி சாலை வழியாக வரலாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் இந்த மஞ்சின்பேலே அணைக்கு சிற்றுலா செல்ல உகந்த காலமாகும்.