சவாய் மாதோபூர் பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த சவாய் மான் சிங் சரணாலயம் ஆகும். இது ஆரவல்லி மற்றும் விந்தயான மலைத்தொடர்களுக்கிடையே அமைந்துள்ளது. நகரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள இந்த சரணாலயம் பலவித உயிரினங்கள் மற்றும் பல அரிய தாவர வகைகளைக் கொண்டுள்ளது.
சவாய் மான் சிங் சரணாலயத்தின் பசுமை வளம் இங்கு காணப்படும் பல வகை மரங்களான நாவல்மரம், வாகை மரம், கடம்ப மரம், கொன்றை மரம், கடய மரம், காரை மரம், புளியமரம், குர்ஜன் மரம், கிர்ணிமரம், சைந்த மரம் போன்றவற்றின் மூலம் புலனாகிறது.
தாவர வகைகள் தவிர காட்டுயிர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பலவகை காட்டுயிர் அம்சங்களும் இந்த சரணாலயத்தில் நிறைந்து காணப்படுகின்றன. சிறுத்தைகள், காட்டுப்பூனைகள், சிறுமான், நில்கை மான், காட்டுப்பன்றி, சீதல் மான், குள்ளநரி, முயல், கழுதைப்புலி மற்றும் சாம்பார் மான்கள் ஆகியவை காணப்படுகின்றன. குயில், கழுகுகள், பலவகை குருவிகள், கௌதாரி, மயில்கள், பச்சைக்கிளிகள், சிட்டுகள், உள்ளான்கள் போன்ற பறவைகளும் இங்கு வசிக்கின்றன.