மக்கேல், சேனாபதியில் உள்ள பல சமூகத்திற்கும் புனித ஸ்தலமாக விளங்குகிறது. அக்காலத்தில் வேட்டையாடும் இன மக்கள் இந்த இடத்தில் குடியேறியதால் இங்குள்ள மக்கள் வேட்டையாடும் பரம்பரையை சேர்ந்தவர்கள்.
இந்த இடம் இன்னுமும் கூட இந்த வட்டார மக்களுக்குக்காக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு பல வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்றன. சேனாபதியின் பணித் தலைமையிடத்திலிருந்து இந்த இடங்களுக்கு சுலபமாக செல்லலாம். இந்த மாநகராட்சியில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களில் இது முக்கிய ஒன்றாகும்.
இந்த இடங்களில் வளர்ந்துள்ள ஆலமரங்கள் புனிதமாக கருதப்படுகின்றன. நாக மாதாவின் கல்லறைகளின் மேல் வளர்ந்துள்ள இந்த மரங்களை தரிசனம் செய்ய மக்கள் வருவதுண்டு.
இந்த இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பேர்வெல் மோனோலித் மற்றும் ட்ரையோமோனோலித் இங்குள்ள மற்ற சில நினைவுச் சின்னங்களாகும்.
சஜௌபாவிலுள்ள பரம்பல் மரம், ஹைல்ஸ்டார்ம் கல் மற்றும் ராசிக்கல் போன்ற இடங்கள் மக்கேல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக அமையும். மணிப்பூரின் வரலாற்றுப் பக்கத்தில் இந்த இடமும் இடம் பெற்றிருகிறது.