யாங்குள்லேன் என்ற சிறிய கிராமம் சேனாபதி நகரத்தில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தின் வரலாற்றை கணநேரக் காட்சியில் நாம் உணர முடியும். இங்கு இந்த ஊர் மக்களின் ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் சிக்கன வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அவைகளை இந்த மக்கள் இன்றளவும் கடைப் பிடிக்கின்றனர். இந்த மரபுகளை இங்குள்ள மக்கள் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்த மக்கள் உபயோகித்த கருவிகளும், அதனை கொண்டு செய்யப்பட்ட தொல் பொருட்களும் தலைமுறைகள் கடந்து இன்றும் பாதுகாத்து வரப்படுகிறது.
ஒட்டு மொத்த கிராமமும் ஒரு குடும்பம் போல் வாழ்கின்றனர். அவர்களின் வேலைகளை அந்தந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்குள் பிரித்துக் கொள்வர்.
இந்த கிராமம் செங்குத்தான பாறைக்கு மத்தியில் அழகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கிருந்து பள்ளத்தாக்குகளின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த கிராம மக்கள் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள இயற்கை வளத்தை பாதுகாத்து வருவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் பயணம் மிகுந்த உல்லாசத்தைத் தரும். சில அறிய வகை செடி வகைகளையும் இங்கு காணலாம்.