ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் அமைந்துள்ள நாவால்கர் எனும் இந்த சிறிய நகரம் 18ம் நூற்றாண்டில் தாகுர் நாவால் சிங் என்பரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் ஷெகாவாடி பகுதியிலிருந்த நாவால்கர் மற்றும் மண்டாவா ஆகிய பிரதேசங்களை ஆண்ட மன்னராவார். இங்குள்ள ஹவேலிகள் 1836ம் ஆண்டு கட்டப்பட்டு நுணுக்கமாக வரையப்பட்டுள்ள சுவரோவியங்களையும் கொண்டுள்ளன.
1920ம் ஆண்டில் கட்டப்பட்ட ஆனந்தி லால் பொத்தார் ஹவேலியும் இங்குள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது. மேலும், இங்கு அமைந்துள்ள பலா கீலா கோட்டையும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது. இதன் சுவர்களில் உள்ளூர் கதைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
ஜோத்ராஜ் பட்டோடியா ஹவேலி, பன்ஸிதர் பகத் ஹவேலி, சொக்கனி ஹவேலி, ரூப் நிவாஸ் பேலஸ், கங்கா மாய் கோயில் மற்றும் பிரிட்டிஷ் கிளாக் டவர் ஆகியவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.