இது குஸ்முடியிலுள்ள சரஸ்வதி கார்டன் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. திபெத்தன் ஏவாம் டோர்ஜே ட்ரக் எனவும் அழைக்கப்படும் இந்த மடாலயமானது திபெத்திய பண்டைய புத்த மத பள்ளிகளில் ஒன்றான நுயிங்க்மா பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறது.
திபெத்தின் மீதான சீன படையெடுப்பின் போது இந்த மடாலயம் அழிவுற்ற பின்னர், புதிதாக ஒன்றை டக்ளுங் செற்றுல் ரின்போக் என்பவர் 1984 ல் சிம்லாவில் கட்டினார். சுற்றுலா பயணிகள் எந்த நுழைவுக்கட்டணங்களையும் செலுத்தத்தேவையில்லை, ஆனால் விருப்பமுள்ள பார்வையாளர்கள் மடாலத்திற்கு நன்கொடை அளிக்கமுடியும்.