ராஜ் பவன் என்றும் அறியப்படும் எல்லர்ஸ்லை ஒரு அழகான காலனித்துவ கட்டிடமாகும். இது தற்போது இமாச்சல பிரதேசத்தின் தலைமைச்செயலகமாக இயங்கி வருகிறது.
இந்த கட்டமைப்பு லெப்டினன்ட் கர்னல் ஹெச்.இ.எஸ். அப்பாட் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. மேலும் 1886 லிருந்து பஞ்சாப் இராணுவ துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது.
1972 ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான வரலாற்றுச்சிறப்பு மிக்க சிம்லா ஒப்பந்தத்தின் பின்னர் இந்த உச்சி மாநாட்டுக்கூடம் பெயரிடப்பட்டது. மூன்று மாடிகளும், 143 அறைகளும் கொண்ட இந்த கட்டிடம் வசீகரமான கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது.