ரோத்னி கேசில் எஸ்டேட் எனப்படும் ரோத்னி கோட்டை ஜக்கு மலைப்பகுதியில் அமைந்துள்ளது. முன்பு இந்த இடம் பிரிட்டிஷ் ஆட்சியில், ஆலன் ஆக்டவியன் ஹ்யும் அவர்களின் குடியிருப்பாக இருந்தது.
அவர் ஒரு சமூக சீர்திருத்த வாதியும், இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். அவர் இந்தியாவில் பறவைகளை ஆராயும் பறவையியலின் (Ornithology) முன்னோடியாக விளங்கினார். இந்த இடம் அழகான இயற்கைக்காட்சிகளை வழங்கும் கண்ணைக்கவரும் பசுமையால் சூழப்பட்ட இடமாக விளங்குகிறது.