அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த குடவி பறவைகள் சரணாலயம் பலவகை பறவைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அர்வலர்களுக்கு இது ஏற்ற இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இங்கு ஜுன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை பலவிதமான புகலிடப்பறவைகளை பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள ஏரியின் இயற்கை அழகு இந்த சரணாலயத்தின் முக்கிய அம்சமாகும்.
0.73 ச.கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பறவைகள் சரணாலயத்தில் சாம்பல் கொக்கு, காட்டுக்கோழி, சிறு காக்கை, பரையா பருந்து மற்றும் வெள்ளை இபிஸ் கொக்கு ஆகியவை வசிக்கின்றன. கர்நாடகாவில் உள்ள ஐந்து முக்கியமான பறவைகள் சரணாலயங்களில் இந்த குடவி பறவைகள் சரணாலயமும் ஒன்றாகும்.
குடவி பறவைகள் சரணாலயம் ஷிமோகாவிலிருந்து 15 கி.மீ தூரத்திலும், சாகர் நகரத்திலிருந்து 41 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள எல்லா சிறு நகரங்களிலிருந்தும் இந்த சரணாலயத்துக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. சிர்சி எனும் இடத்திலிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்திலேயே இந்த குடவிக்கு வந்து சேரலாம்.