ஷிமோகாவிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சக்ரேபாயலு யானைப்பயிற்சி முகாம் ஒவ்வொரு வருடமும் கணிசமான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள கஜனூர் அணையும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
யானைக்கூட்டங்களால் அநாதையாக விட்டுச்செல்லப்படும் யானைக்குட்டிகள் இந்த முகாமில் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. அனுபவமிக்க யானைப்பாகர்கள் இங்கு யானைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றனர்.
சக்ரேபாயலு யானை முகாம் குழந்தைகளோடு விஜயம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். கம்பீரமான யானைகள் துங்கா ஆற்றில் குளிப்பதை பார்த்து ரசிப்பது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இங்கு பார்வையாளர்கள் யானைகளை நெருங்கி தொட்டு விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். காலை 8.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இங்கு பார்வையாளர்களுக்கான அனுமதி நேரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருகிலுள்ள எல்லா நகரங்களோடும் இந்த இடம் நல்ல போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஷிமோகாவிலிருந்து பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் பயணிகள் இந்த இடத்தை அடையலாம்.