1974ம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த ஷராவதி பள்ளத்தாக்கு காட்டுயிர் சரணாலயம் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
431 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயம் மிகப்பெரிய காட்டுச்சுற்றுலா மண்டலம், மற்றும் வெளிப்புற வனப்பகுதி, அடர்ந்த மையப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
புகழ் பெற்ற ஷரவதி ஆறு இந்த அடர்ந்த வனப்பகுதியின் வழியே ஓடிவருகிறது. சரணாலயத்தின் மற்றொரு அழகம்சமாக இந்த ஆற்றை சொல்லலாம்.
ஷராவதி பள்ளத்தாக்கு காட்டுயிர் சரணாலயத்தில் பலவகையான விலங்கினங்கள் வசிக்கின்றன. கருஞ்சிறுத்தை, சம்பார் மான், புலி, குள்ள நரி, கரடி, மலபார் ராட்சத அணில், காட்டுப்பன்றி, எறும்புத்திண்ணி, பறக்கும் ராட்சத அணில் மற்றும் குரைக்கும் மான் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஊர்வன ஜந்துக்களில் நாகப்பாம்பு, மலைப்பாம்பு, சாரைப்பாம்பு மற்றும் முதலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஷராவதி சரணாலயத்திற்கு அருகில் சாகர் நகரம் அமைந்திருக்கிறது. இங்கிருந்து 7 கி.மீ தூரத்திலேயே ஷராவதி சரணாலயத்தை அடையலாம். இது தவிர மங்களூரிலிர்ந்து பட்கல் வழியாக தல்குப்பாவிற்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த மார்க்கமாகவும் வெகு சுலபமாக ஷராவதி சரணாலயத்திற்கு செல்லலாம்.