இயற்கை எழில் அம்சங்கள் ஏராளம் நிறைந்திருக்கும் ஷிமோகாவில் வரலாற்று பின்னணிக்கான ஒரு முக்கிய அம்சமாக இந்த ஷிவப்பநாய்க்கா பேலஸ் மியூசியம் அமைந்திருக்கிறது.
இந்த அரண்மனையின் வரலாறு 16ம் நூற்றாண்டு வரை நீள்கிறது. ரோஸ்வுட் மரத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனை கேலடி மன்னர் ஷிவப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.
கர்நாடக மாநில அரசின் தொல்லியல் துறை இந்த அரண்மனையை பராமரித்து நிர்வகித்து வருகிறது. இந்த அரண்மனை வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது.
இதில் கேலடி ராஜவம்சத்தின் பாரம்பரிய ஞாபகார்த்தப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பலவிதமான புராதன கலைப்பொருட்கள், கற்சிற்பங்கள், கல்வெட்டுக்குறிப்புகள் மற்றும் சிலைகளை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.துங்கா ஆற்றின் கரையிலேயே இந்த அரண்மனை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நகர மையத்திலேயே அமைந்திருப்பதால் இந்த அரணமனையை சென்றடைவதில் பயணிகளுக்கு போக்குவரத்து சிரமங்கள் ஏதுமில்லை. உள்ளூர் பேருந்து சேவைகள் மூலம் இந்த இடத்திற்கு சுலபமாக வரலாம். ஷிமோகா நகரின் டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்றவற்றையும் பயணிகள் இங்கு வருவதற்கு பயன்படுத்தலாம்.