தியவரேகொப்பா ‘லயன் அன்ட் டைகர் சஃபாரி’ எனும் இந்த இடம் ஷிமோகா மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இந்த சஃபாரி பூங்கா1988ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இயற்கை அழகு மற்றும் பலவகையான உயிரினங்கள் இந்த காட்டுயிர் பூங்காவில் நிரம்பியுள்ளன. பல அரிய புகலிடப்பறவைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், புலிகள், மான் மற்றும் கரடி போன்ற விலங்குகள் இங்கு வசிக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சஃபாரி பூங்காவிற்கு வருகை தருகின்றனர். இது 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்துள்ளது.
மழைக்காலத்திற்கு பிந்தைய பருவமாகிய செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் இந்த வனப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற மாதங்களாக உள்ளன. தியவரேகொப்பாவிற்கு அருகிலேயே பல காட்டுயிர் சரணாலயங்கள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தியவரேகொப்பா சஃபாரி பூங்கவிற்கு அருகில் 15 கி.மீ தூரத்திலேயே ஷிமோகா ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஷிமோகா, சாகர் மற்றும் பெங்களூரிலிருந்து தியவரேகொப்பா வருவதற்கு பேருந்து சேவைகள் உள்ளன.
ஷிமோகாவிலிருந்து வேன் மற்றும் ஆட்டோ மூலமாகவும் இந்த இடத்திற்கு 20 நிமிடப்பயணத்தில் வந்து சேரலாம்.